Wednesday, March 2, 2011

உங்கள் கணினியில் ஸ்கிரீன்சாட் (Print screen) எடுப்பதற்கு அருமையான மென்பொருள்


நமக்கு பிடித்த இடங்கள், மனிதர்கள், இயற்கை காட்சிகள் மற்றும் பலவற்றை புகைப்படங்களாக எடுத்து வைத்திருப்போம். அதுபோல கணனியில் உள்ள படக்காட்சிகளை அல்லது சில முக்கியமான கோப்புகளை படம் பிடிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

எனது கணனியில் ஸ்கிரீன்சாட்  எடுத்த புகைப்படங்கள்....









இது போன்ற படங்கள் விளக்க குறிப்புகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இணையத்தில் இருந்து பதிவிறக்க முடியாத இணையபக்கங்களை இமேஜ் வடிவில் சேமித்து வைக்க நினைப்போம். அந்த நிலையில் நாம் படவடிவில் மாற்ற நினைக்கும் பக்கத்தினை திறந்து கீபோர்டில் உள்ள பிரின்ட் ஸ்கிரின் பட்டனை அழுத்தி பெயின்ட், போட்டோசாப் அல்லது எதாவது ஒரு போட்டோ எடிட்டரின் உதவியுடன் மட்டுமே அந்த பக்கத்தை இமேஜ் பைலாக மாற்ற முடியும்.
நாம் இவ்வாறு செய்வதால் நேரதாமதம் மட்டுமே ஏற்படும். இதற்கு பதிலாக எந்த பக்கத்தை மட்டும் இமேஜ்ஜாக மாற்ற வேண்டுமோ அதை ஸ்கிரீன்சாட் மென்பொருள் மூலம் இமேஜ் பைலாக நமக்கு வேண்டிய பகுதியை மட்டும் படமாக்கி கொள்ள முடியும். இந்த ஸ்கிரீன்சாட் மென்பொருட்கள் பலவும் சந்தையில் கிடைக்கிறன. ஆனால் எந்த மென்பொருளும் சிறப்பானதாக இல்லை. இலவச (Freeware) மென்பொருளாக RapiCapWin என்ற மென்பொருள் கிடைக்கிறது.
இந்த மென்பொருளின் உதவியுடன் குறிப்பிட்ட பகுதியை மட்டும் நாம் படமாக்கி கொள்ள முடியும். இந்த மென்பொருளான jpg, gif, bmp போன்ற பைல் பார்மெட்டுக்களை ஆதரிக்க கூடியது. இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும்.
பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்தவுடன், ஒரு விண்டோ ஒப்பன் ஆகும். உங்களுக்கு வேண்டிய பகுதியை மட்டும் தேர்வு செய்து Capture பொத்தானை அழுத்தவும். உடனே இமேஜ் பைல் உருவாகிவிடும். இதில் சிறப்பம்சம் என்னவெனில் தேவையில்லாத Capture செய்துவிட்டோம் எனில் உடனே டெலிட்டும் செய்து கொள்ள முடியும்.

மென்பொருளை தரவிறக்கம் செய்ய--

Tuesday, March 1, 2011

Tower இல்லாமல் செயல்படும் மொபைல் போன் கண்டுபிடிப்பு




மொபைல்போன் டவர்கள் மூலமாக சிக்னல்களை பெற்று தான் தற்போது மொபைல் போன்கள் இயங்கி வருகின்றன. டவர்கள் இல்லாவிட்டால் மொபைல் போன்கள் இயங்காது. ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகள் டவர்கள் இல்லாமலேயே செயல்படக் கூடிய நவீன செல்போன் தொழில் நுட்பத்தை அவர்கள் உருவாக்கி உள்ளனர். பிளைண்டர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் செயல்படும் சர்வதேச குழு Software ஒன்றை உருவாக்கி உள்ளது.
இந்த Software அழைப்புகளை ஒரு மொபைல் போனில் இருந்து இன்னொரு மொபைல் போனுக்கு ரிலே செய்ய உதவும். இதன் மூலம் டவர்கள் இல்லாமலேயே செல்போன்கள் இயங்கும். ஒரே ஒரு ஆபரேடிவ் டவர் மட்டும் இருக்கும். அதோடு எல்லா மொபைல் போன்களும் இணைக்கப்பட்டு இருக்கும். செயல்படும் (ஒப்பிரேடிவ்) டவர் இல்லாத பகுதிகளுக்கு மொபைல் போன்களில் இருந்து சிக்னல்கள் பெறப்பட்டு அவை சிக்னல்கள் மூலமாகவே அஞ்சல் செய்ய இந்த நவீனSoftware  உதவும்.