Friday, January 21, 2011

யாழில் சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் சர்வதேச வர்த்தக கண்காட்சி இன்று  21 திகதி ஆரம்பமாகியுள்ளது. இந்த கண்காட்சி (22, 23)வரை நடைபெறும்

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் சுப்பிரமணியம் பூங்காவிற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட இக் கண்காட்சியும் விற்பனையும் தொடந்து மூன்று தினங்கள் நடைபெறவுள்ளன. யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலுடன் கண்காட்சியும் விற்பனையும் ஆரம்பிக்கப்பட்டது.

இக் கண்காட்சியில் 300ற்கும் மேற்பட்ட நிறுவனங்களின் காட்சியறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை உள்ளுர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment